21-ந்தேதி சர்வதேச யோகா தினம்: கோவில்பட்டியில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

கோப்புப்படம்
இந்தியாவில் 2015 ம் ஆண்டில் இருந்து சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி யோகா தினம் கொண்டாடப்படுகிறது,
அந்த வகையில் கோவில்பட்டி யோகாலயா பயிற்சி நிலையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வருகிற 21-ந்தேதி கோவில்பட்டி ஆர்த்தி மகால் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை பிரமாண்டமாக கொண்டாட யோகா குணா ஏற்பாடு செய்துள்ளார்.
யோகாலையா யோகா பயிற்சி நிலையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இந்த யோகா தினத்தை கொண்டாடுகின்றன,
யோகா தினமான 21-ந் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை யோகா பயிற்சி அளிக்கப்படும். பிரபல யோகா மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளிக்கிறார்கள்.
யோகா தின கொண்டாட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. அனைவருக்கும் இலவச அனுமதி. யோகா தினத்தில் கலந்து கொள்வோருக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படும்.
இதில் பங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் வெள்ளை டி.-சர்ட் அணிந்து வரவேண்டும். கோவில்பட்டியை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
யோகா தின நிகழ்ச்சியை தொடர்ந்து 3 நாட்களுக்கு கோவில்பட்டியில் முக்கிய பள்ளிகளில் முகாமிட்டு யோகா குணா தலைமையில் பிரபல மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.
நவம்பரில் யோகா மஹா உற்சவம்
கோவில்பட்டி யோகாலாயா பயிற்சி நிலையம் சார்பில் நவம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா மஹா உற்சவம் நடத்தப்படுகிறது.
4 வயது முதல் 16 வயது வரை மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளில் யோகா பயிற்சியை பிரபல மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் நடத்துகிறார்கள்.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 77083 73470 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று யோகா குணா தெரிவித்து உள்ளார்.
