• June 8, 2025

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு மையம் திறப்பு

 கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு மையம் திறப்பு

கோவில்பட்டி   அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  ரூ. 5 லட்சம் மதிப்பில், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கும் காத்திருப்பு மையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

விழாவில், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், துாத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் போடுசாமி, நகர அதிமுக  செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி, பழனிச்சாமி, மகளிரணி செயலாளர் பத்மாவதி, இணை செயலாளர்கள் கோமதி, ஜெயந்தி, நகராட்சி கவுன்சிலர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *