இயற்கை மருத்துவ முறை செயல்விளக்க பயிற்சி

கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா துறை,கோவில்பட்டி வாழும் கலை அமைப்பு ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா செயல் விளக்க பயிற்சி நடந்தது.
இயற்கை மருத்துவ முறையில் கண் மற்றும் நாசி சுத்தப்படுத்துதல் குறித்தும்.யோகா மூலம் சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் செயல்விளக்க பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பின் நிர்வாகி செந்தில்நாயகம் தலைமை தாங்கினார். செந்தூர்பாண்டியன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி அளித்தார்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
