கோவில்பட்டி பகுதியில் நாளை மாலை பொதுமக்களுக்கு கனிமொழி எம்.பி நன்றி தெரிவிக்கிறார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி தொகுதி மக்களை கனிமொழி எம்.பி.நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு குலசேகரபுரத்தில் தொடங்கி லிங்கம்பட்டி, வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், விஜயபுாி, காிசல்குளம், பாண்டவர் மங்கலம், பசுவந்தனை ரோடு, ஜோதிநகர், கடலையூர்ரோடு, தாமஸ் நகர், இலுப்பையூரணி, புதுக்கிராமம் வேலாயுதபுரம், காமராஜர் சிலை, பஸ்டாணட், இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி படர்ந்த புலி, முடுக்குமீண்டான்பட்டி நாலாட்டின்புதூரில் நிறைவு செய்கிறார்.
மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் கனிமொழி எம்.பிக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்திடவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
