• June 8, 2025

அமைச்சர் கீதா ஜீவனுடன் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்திப்பு

 அமைச்சர் கீதா ஜீவனுடன் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்திப்பு

மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது  ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிகரெட் லைட்டர் விற்பனையானது 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது. 

எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில .அரசுகளுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு  சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை சந் தித்தனர். 

சீன லைட்டர்கள் விற்பனையை தடை செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டானர். 

இந்த சந்திப்பில் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கதலைவர் மா. பரமசிவம், செயலாளர் வி.எஸ். சேதுரத்தினம்,  நிர்வாகிகள் திலகரத்தினம், என் எத்திராஜ், எஸ்.ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *