கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட்டார அளவில் “எனது பாரதம் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின்” சார்பாக “பெண் சக்தி உடற்பயிற்சி (ஆரோக்கிய) ஓட்டம்” நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை கல்லூரி முதல்வர் முனைவர் ந. சுப்புராஜ் தலைமையில், நேரு யுவ கேந்திரா இளைஞர் மன்ற மாவட்ட ஆலோசகர் விஜயன் அவர்கள் முன்னிலையில், நேரு யுவ கேந்திரா இளைஞர் மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர், 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் […]
கோவில்பட்டியில் மூத்த வக்கீல் கே. எஸ். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:- தற்போது கிராபைட் தனிமம் கரிசல் மண்ணில் எடுக்க விழைந்தால் நேரடியாக பாதிப்பு அடையும் கிராமங்களாக குறிஞ்சாக்குளம், மைப்பாறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அய்யாபுலிப்பட்டி, குருவிகுளம், ராமலிங்காபுரம், குளக்கட்டாகுறிச்சி, சீகம்பட்டி,அத்திப்பட்டி,ராமநாதபுரம், கழுகுமலை, கணபதிபட்டி, கரிசல்குளம்,ஆலமநாயக்கர்பட்டி போன்ற கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அதன் மாசுகளால் வெம்பக்கோட்டை தாலுகா கிராமங்கள், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள இளையரசனேந்தல் பிர்கா கிராமங்கள், சங்கரன்கோவில் தாலுகா கிராமங்கள் ஆகியன பாதிப்பு அடையும். நிலத்தடி […]
அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் நாய்கள் தொல்லை; நாள்தோறும் நடக்கும் நாய்க்கடி சம்பவத்தால்
கோவில்பட்டி நகராட்சி மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கோவில்பட்டி நகரை எடுத்துகொண்டால் முக்கிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிகின்றன. செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே எட்டயபுரம் சாலையில் இரவு நேரத்தில் எப்போதும் நாய்க்கூட்டத்தை காணமுடியும். இது போல் வேலாயுதபுரம், புதுரோடு, கடலையூர் ரோடு பகுடியிலும் நாய்த்தொல்லை அதிகம் இருக்கிறது. கோவில்பட்டி நகருக்கு அருகாமையில் உள்ள சுபா நகரில் சில மாதங்களுக்கு முன்பு ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி ஓடி வந்த நாய் […]
தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமை தாங்கினார்.. கோவில்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா வரவேற்று பேசினார். ஜெய்கிருஷ் தொண்டு நிறுவனர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினார். சட்டப் படிப்பில் தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்வு பெற்று தங்கப்பதக்கம் வெற்ற மாணவி கார்மல் ஜென்ஸி கவுரவிக்கப்பட்டார். பெண்கள் தினத்தை வாழ்த்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், […]
அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க.,தேமுதிக கட்சிகள் பா.ஜனதா பக்கம் சாய்கிறது
அதிமுக கூட்டணியில் பா.ம.க.மற்றும் தேமுதிக கட்சிகள் பேச்சு நடத்தி வந்தன. இந்த கட்சியினர் கேட்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை மேற்கொண்டார். அந்த கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த் நிலையில் அதிமுகவுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தேமுதிக வும் பா.ஜனதா பக்கம் சாய்வதாக தெரிகிறது.கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் இரண்டு கட்சிகளும் பா.ஜனதா […]
கோவில்பட்டி ஆக்கி கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான 7s ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது . இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின அரை இறுதி போட்டிக்கு பாண்டவர்மங்கலம் ஏ மற்றும் பி அணியினரும் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் மற்றும் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் தகுதி பெற்றனர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் பாண்டவர்மங்கலம் B […]
மாதம்தோறும் வரக்கூடியது இந்த மூன்றாம் பிறை தரிசனம். ஆனாலும் இந்த மாதம், மாசி மாதம் அமாவாசை முடிந்து, மூன்றாம் பிறை தரிசனம் ஆனது திங்கள்கிழமை வந்திருக்கின்றது. சிவபெருமானுக்கு உரிய தினமான இந்த திங்கட்கிழமையில் மூன்றாம் பிறை தரிசனம் நமக்கு கிடைத்திருப்பதால், இதை சோமவார சந்திர தரிசனம் என்று சொல்லுகிறார்கள். இன்றைய தினம் பிறை நிலவை பார்க்க தவறவிடாதீர்கள். (11.3.2024) மாலை பிறை நிலவை தரிசனம் செய்யும் போது என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், இதோடு […]
கோவில்பட்டி தேவர் சமூக நல சங்கம் மற்றும் தியான் ஹெல்த் கேர் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாம் கோவில்பட்டி தேவர் தொடக்கப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், இஜிசி, மற்றும் எக்ஸ்ரே முதல் அனைத்து பொது மருத்துவம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, இருதய பரிசோதனை, நுரையீரல் சம்பந்தப்பட்ட பரிசோதனை, பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட […]
கோவில்பட்டியில் மாணவர்களுக்கான ஆக்கி விளையாட்டு மையம் : கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கான முதன்மை நிலை ஆக்கி விளையாட்டு மையம் கட்டுவதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று (9/3/2024) அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சியான காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வத்தது. இந்த நிலையில் இன்று 9 ந் தேதி தொகுதி ஒதுக்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே சுமுக முடிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் 9 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பத்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கையெழுத்து போட்டு […]