18 அணிகள் பங்கேற்ற ஆக்கி போட்டியில் பாண்டவர்மங்கலம் ஏ அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்

கோவில்பட்டி ஆக்கி கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான 7s ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது .
இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின அரை இறுதி போட்டிக்கு பாண்டவர்மங்கலம் ஏ மற்றும் பி அணியினரும் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் மற்றும் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் தகுதி பெற்றனர்
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் பாண்டவர்மங்கலம் B அணியினர் ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணியினரை 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர் பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாண்டவர்மங்கலம் ஏ அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியினரை வீழ்த்தி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.
பரிசளிப்பு விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைத் தலைவர்கள் மணிமாறன், உமா சங்கர், துணைச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சர்வதேச ஆக்கி நடுவர் தம்புராஜ் முன்னாள் சர்வதேச ஆக்கி வீரர் அஸ்வின் கோவில்பட்டி நகர்மன்ற 32 வது வார்டு கவுன்சிலர் கவியரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற் கோப்பை மற்றும் முதல் இடம் பெற்ற பாண்டவர்மங்கலம் ஏ அணியினருக்கு 5000 ரூபாய் பரிசு இரண்டாவது இடம்பெற்ற கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியினருக்கு ரூபாய் 3000 ரொக்க பரிசம் மூன்றாவது இடம் பெற்ற பாண்டவர்மங்கலம் B அணியினருக்கு 2000 ரூபாய் ரொக்க பரிசம் நான்காவது இடம் பெற்ற ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணியினருக்கு ரூபாய் ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள்
சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி வீரர் மதன்குமார், சிறந்த கோல் கீப்பர் விருதை யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அணி கோல் கீப்பர் ஈஸ்வர், சிறந்த முன்கல ஆட்டக்காரருக்கான விருதை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக வீரர் பிரேம்குமார் ஆகியோர் பெற்றனர்.
போட்டியின் இயக்குனராக திருச்செல்வம் நடுவர்களாக காளிதாஸ், சிவா ஆனந்த், மதன், கார்த்திக் ராஜா, நாகராஜ் ஆகியோர் செயல்பட்டனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் மற்றும் கோவில்பட்டி ஆக்கி கிளப் செயலாளர் காளிமுத்து பாண்டியராஜா மற்றும் விவின் காந்த், கவுதம், மாசாணம், வேல்முருகன் ஆகியோர் செய்து இருந்தனர் பரிசளிப்பு விழாவில் முன்னாள் வீரர்கள் மோகன், தெய்வபாலன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் வேல்முருகன் நன்றி கூறினார்.
