• June 8, 2025

செல்வவளம் பெருகும்: இன்று மாலை சோமவார பிறைதரிசனம்- தவறவிடாதீர்கள் …

 செல்வவளம் பெருகும்: இன்று மாலை சோமவார பிறைதரிசனம்- தவறவிடாதீர்கள் …

மாதம்தோறும் வரக்கூடியது இந்த மூன்றாம் பிறை தரிசனம். ஆனாலும் இந்த மாதம், மாசி மாதம் அமாவாசை முடிந்து, மூன்றாம் பிறை தரிசனம் ஆனது திங்கள்கிழமை வந்திருக்கின்றது.

சிவபெருமானுக்கு உரிய தினமான இந்த திங்கட்கிழமையில் மூன்றாம் பிறை தரிசனம் நமக்கு கிடைத்திருப்பதால், இதை சோமவார சந்திர தரிசனம் என்று சொல்லுகிறார்கள்.

இன்றைய தினம் பிறை நிலவை பார்க்க தவறவிடாதீர்கள்.  (11.3.2024) மாலை பிறை நிலவை தரிசனம் செய்யும் போது என்ன மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும், இதோடு சேர்த்து பண கஷ்டம் தீருவதற்கு பிறை தரிசனத்தின் போது பீரோவில் வைக்க வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சோமவார_சந்திர_தரிசனம்:

மூன்றாம் பிறை நிலவும் அந்த ஈசனும் வேறு வேறு அல்ல. மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்தால், அந்த சிவனையே பார்த்ததாகத்தான் அர்த்தம். ஆகவே, இந்த தரிசனத்தை யாரும் தவற விடாதிங்க. பொதுவாக மூன்றாம் பிறை தரிசனம் செய்பவர்களுக்கு தெரியும், பிறை நிலவு எப்போது வரும் என்பது. தெரியாதவர்களுக்கு இந்த குறிப்பு.

இன்று மாலை 6.30 மணிக்கு மேல் மேற்கு திசையை நோக்கி பார்க்கவும். மேற்கு திசையில் பிறை நிலவு உதிக்கும். மாலை 6.30 முப்பது மணியிலிருந்து, 7 மணிக்குள் இந்த நிலவை நீங்கள் தரிசனம் செய்யலாம்.

வானம் தெளிவாக இல்லை. மேகமூட்டமாக இருக்கிறது எனும் பட்சத்தில் பிறை நிலவு தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. சில சமயம் பிறை நிலவு தெரியாது இருந்தாலும் பரவாயில்லை

இந்த ஆறு முப்பது மணியிலிருந்து ஏழு மணிக்குள், இருக்கக்கூடிய நேரத்தில் நீங்கள் மேற்கு பார்த்தவாறு வெட்ட வெளியில் நின்று கொண்டு இரண்டு கைகளை ஏந்திய படி சந்திரபகவானை, ஈசனை நினைத்து பிறை தரிசனம் செய்ய வேண்டும். உங்களுடைய உள்ளங்கையில் 1 கைப்பிடி பச்சரிசியும், 1 வசம்பு துண்டும் இருக்கட்டும்.

உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் எல்லாம் தீர வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். பீரோவில் பணம் சேமிப்பில் தங்க வேண்டும், என்று நேர்மறையாக அந்த ஈசனை பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் இருக்கும் பச்சரிசியையும் வசம்பையும் ஒரு வெள்ளை துணியில் கட்டி பீரோவில் வைத்து விட வேண்டும். மாலை 6.30 முப்பது மணியிலிருந்து 7. அல்லது 7.15  மணிக்குள் இந்த எல்லா வேலையையும் செய்து முடித்து விடுங்கள்.

இப்படி சந்திரனை தரிசனம் செய்யும் போது உள்ளங்கைகளில் இந்த இரண்டு பொருட்களை வைத்துக் கொண்டு, ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை மனமுருகி 27 முறை சொல்லுங்கள். உங்களுக்கு மொட்டை மாடிக்கு செல்லக்கூடிய வசதி இல்லை என்றால் பால்கனியில் இதை செய்யலாம். பால்கனியிலும் வெட்டவெளியில் இந்த தரிசனத்தை செய்ய முடியாது என்பவர்கள் ஜன்னல் பக்கமாக அமர்ந்து சந்திர பகவானை மேல் சொன்ன முறையில் வழிபாடு செய்யுங்கள்.

இந்த மூன்றாம் பிறை தரிசனம் செய்யும் போது, இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். லச்சக்கணக்கான பேர் இந்த பிறை தரிசனத்தை செய்வதற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள். நேர்மறை ஆற்றல் நிரம்பி வழியும் இந்த சமயத்தில் நாம் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும்.

சந்திர பகவானுக்குரிய பச்சரிசி மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடிய வசம்பு இந்த இரண்டு பொருட்களும் உங்கள் கையில் இருக்கும் போது ஒரு மாதத்திற்கு தேவையான ஒட்டுமொத்த நல்லதையும் நீங்கள் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ளலாம். இந்த 2 பொருட்களையும் கொண்டு போய் அப்படியே பீரோவில் வைக்கும் போது நிச்சயமாக எதிர்மறையாற்றல் அழிக்கப்பட்டு நேர்மறை ஆற்றல் பெருகி உங்களுடைய வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் இந்த பிறை தரிசனமானது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். மன குழப்பத்தை தீர்க்கும். சந்தோஷத்தை பல மடங்காக பெருக்கும். இதையெல்லாம் சொல்லி உங்களால் நம்ப முடியாது. பல நாட்களாக பிறை தரிசனத்தை செய்து பலன் பெற்றவர்களால் மட்டும் தான் இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

நீங்களும் இன்றைய தினம் பிறை நிலவை தரிசனம் செய்யுங்கள். உங்கள் மனதில் தோன்றும் பாசிட்டிவ் எனர்ஜியை உணர்ந்த பின்பு இந்த நாளை நீங்கள் மறக்கவே மாட்டீர்கள்.

மாதம் தோறும்  பிறை நிலவை தரிசனம் செய்வதை உங்கள் வழக்கமாக வைத்துக் கொள்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *