• June 8, 2025

இலவச பொது மருத்துவ முகாமில் 300 பேர் பயன்பெற்றனர்

 இலவச பொது மருத்துவ முகாமில் 300 பேர் பயன்பெற்றனர்

கோவில்பட்டி தேவர் சமூக நல சங்கம் மற்றும் தியான் ஹெல்த் கேர் மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாம்  கோவில்பட்டி தேவர் தொடக்கப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், இஜிசி, மற்றும் எக்ஸ்ரே முதல் அனைத்து பொது மருத்துவம்,  புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, இருதய பரிசோதனை, நுரையீரல் சம்பந்தப்பட்ட பரிசோதனை, பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பரிசோதனை,  தைராய்டு , கொலஸ்ட்ரால் ரத்த சோகை. மூட்டு தேய்மானம், காது சம்பந்தமான பரிசோதனை இவைகள் அனைத்தும் இலவசமாக நடந்தது.

டாக்டர்கள் குழுவினர், முகாமில் பங்கேற்ற  பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்தனர்,

மருத்துவ முகாமிற்கு டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கினார். தேவர் சமூக நல சங்க செயலாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார்.நகர்மன்ற தலைவர் கருணாநிதி, குத்துவிளக்கு ஏற்றி முகமை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக பிஜேபி மாரியப்பன் தமிழ் மாநில காங்கிரஸ் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். தேவர் திருமகன் இளைஞர் அணி நிறுவனர் ஜெயபிரகாஷ், தேவர் தொடக்கப்பள்ளி செயலாளர் கருப்பசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி புல்பான்டியன், கருப்பசாமி என்ற முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர், கார்மேக பாண்டியன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *