• June 8, 2025

பெண்கள் தினவிழா: இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்தகோரி தீர்மானம்  

 பெண்கள் தினவிழா: இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்தகோரி தீர்மானம்  

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமை தாங்கினார்.. கோவில்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா வரவேற்று பேசினார். ஜெய்கிருஷ் தொண்டு நிறுவனர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினார்.

சட்டப் படிப்பில் தமிழகத்திலேயே முதல் மாணவியாக தேர்வு பெற்று தங்கப்பதக்கம் வெற்ற மாணவி கார்மல் ஜென்ஸி கவுரவிக்கப்பட்டார். பெண்கள் தினத்தை வாழ்த்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், திருவள்ளுவர் மன்ற தலைவர் க. கருத்தப்பாண்டி, பெண்கள் இணைப்புகள் குழு மாவட்ட நிர்வாகிகள் அருள்செல்வி, ஜெயலட்சுமி, ஆனந்தலட்சுமி, ஆகியோர் பேசினர்

விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* சட்டமன்றம், பாராளுமன்றங்களில் 30% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்.

*மத்திய, மாநில பெண்கள் ஆணையங்களுக்கு போதுமான நிதியும், அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.

*பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலின சமத்துவ கல்வி அளிக்கப்படவேண்டும்

*பெண்களை கடனாளியாக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழா தொடக்கத்தில்  விவசாய பிரச்சினைகள் குறித்த பெண்களின் கும்மியாட்டம், குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *