• June 8, 2025

கரிசல் மண் பகுதியில் கிராபைட் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும்; வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

 கரிசல் மண் பகுதியில் கிராபைட் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும்; வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

கோவில்பட்டியில் மூத்த வக்கீல் கே. எஸ். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:-

தற்போது கிராபைட் தனிமம் கரிசல் மண்ணில் எடுக்க விழைந்தால் நேரடியாக பாதிப்பு அடையும்  கிராமங்களாக குறிஞ்சாக்குளம், மைப்பாறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அய்யாபுலிப்பட்டி, குருவிகுளம், ராமலிங்காபுரம், குளக்கட்டாகுறிச்சி, சீகம்பட்டி,அத்திப்பட்டி,ராமநாதபுரம், கழுகுமலை, கணபதிபட்டி, கரிசல்குளம்,ஆலமநாயக்கர்பட்டி போன்ற கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்படும்.

அதன் மாசுகளால் வெம்பக்கோட்டை தாலுகா கிராமங்கள், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள இளையரசனேந்தல் பிர்கா கிராமங்கள், சங்கரன்கோவில் தாலுகா கிராமங்கள் ஆகியன பாதிப்பு அடையும். நிலத்தடி நீர் ஆதாரம் இன்மையால் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் வரைக்கும், கழுகுமலையில் இருந்து வெம்பக்கோட்டை வரைக்கும் உள்ள ஊர்கள் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு அடைந்து, விவசாயம் மற்றும் வீட்டு தேவைகளுக்கு ஆன நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு அடையும் சூழ்நிலை உள்ளது.

இந்த பகுதிகளுக்கு குடிநீர் தேவைகளுக்கு மட்டுமே அரசு நகர பகுதிகளுக்கு தண்ணீர் தந்து கொண்டு உள்ளது. மற்ற கிராம புற குடிநீர் தேவைக்கும் மற்றும் வீட்டு தேவைகளுக்கு வழங்கும் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு அடையும் நிலை உள்ளது.வறண்ட வைப்பாறும் பாதிப்பு அடையும்.

ஏற்கனவே இந்த திட்டத்தை எனது பாட்டனார் வெங்கடாசலய்யா நாயக்கர் 1932  லிலும்,1966 இல் காமராஜரை வைத்து எனது தந்தை சீனிவாச நாயக்கர் ,1996 இல் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீண்டும் முயற்சி எடுத்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம்  எனக்கு இருந்த செல்வாக்கை வைத்து தடுத்துவிட்டேன்.

இப்படியாக மூன்று முறை என்னால் மற்றும் எனது குடும்ப முன்னோர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.தற்போது பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் இந்த திட்டத்தை தடுக்கவும்,எதிர்க்கவும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன். வரும் தேர்தலை கூட புறக்கணிப்போம்.

அதனால்,மக்களின் உணர்வு அறிந்து இந்த பகுதியில் கிராபைட் எடுப்பதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யவேண்டும். ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் அனுமதி வழங்கி உள்ளதையும் ரத்து செய்யவேண்டும்.

இல்லையேல், மக்களை திரட்டி, திருவேங்கடம் நகரில் மிகப் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டமும், அதன் பிறகு கிராபைட்டுக்கு எதிராக கோவில்பட்டியில் மாநாடும் நடத்தப்படும்.அதற்கான தேதியை கார்பைட் எதிர்ப்பு குழு பின்னர் அறிவிப்பு செய்யும்.

தென் மாவட்டங்களின் மையமாக இருக்கக்கூடிய,மாவட்டம் அமைய அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கி உள்ள கோவில்பட்டியை மாவட்டம் ஆக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதனை அறிவித்த வருவாய்த்துறை அமைச்சர், அடுத்த பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிப்பு செய்வார்கள் என்று கோவில்பட்டி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். ஆகவே, உடனே கோவில்பட்டியை மாவட்டம் ஆக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்,

அதற்காக கோவில்பட்டி, சாத்தூர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகள் , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வட பகுதிகள், அத்துடன் திருவேங்கடம் தாலுகா பெரும்பகுதி இடம்பெறும் மாவட்டமாக இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

.கோவில்பட்டி புராண காலத்திலும் , இதிகாச காலங்களில் கோவில்பட்டி பற்றிய செய்தி உள்ளது. இதிகாச காலத்தில் அனுமன் பற்றியும் ஸ்ரீ ராமரை பற்றிய பற்றியும் கோவில்பட்டி தொடர்புடைய பகுதியாக இருந்து உள்ளது.

உழவர் பெருந்தலைவர் அய்யா நாராயணசாமி நாயுடு  மணி மண்டபம் மற்றும் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வைத்தும் இதுவரை வந்த அரசுகள் நிறைவேற்றம் செய்யாத காரணத்தால் எனக்கு சொந்தமான  இடத்தில் அய்யா சிலை நிறுவ பணியும் அதற்கான சிலை அமைப்பு குழுவும் அமைக்கப்படும்.

இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்,

தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் எஸ். ரெங்கநாயகலு, சமூக ஆர்வலர் வக்கீல் அய்யலுசாமி  உள்பட பலர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *