• June 8, 2025

உண்ணாமலை  கலை கல்லூரியில் மகளிர் தின விழா

 உண்ணாமலை  கலை கல்லூரியில் மகளிர் தின விழா

கோவில்பட்டி  உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  வட்டார அளவில் “எனது பாரதம் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின்” சார்பாக “பெண் சக்தி உடற்பயிற்சி (ஆரோக்கிய) ஓட்டம்” நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை கல்லூரி முதல்வர் முனைவர் ந. சுப்புராஜ் தலைமையில், நேரு யுவ கேந்திரா இளைஞர் மன்ற மாவட்ட ஆலோசகர் விஜயன் அவர்கள் முன்னிலையில், நேரு யுவ கேந்திரா இளைஞர் மகளிர் மன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்,

100 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்குபெற்ற 500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மேனகா, மதுமிதா, தேவதர்ஷினி ஆகிய மாணவிகளுக்கு டி.சர்ட்   மற்றும் தொப்பி பரிசளிக்கப்பட்டது. மேலும் 25 மாணவிகளுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி தாளாளர் விஜயன் அறிவுறுத்தலின்படி கல்லூரி முதல்வர் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ், அனைத்துத் துறைப்பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *