• June 6, 2025

Month: February 2024

கோவில்பட்டி

அங்கன்வாடி மைய கட்டிடம்; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் ஊராட்சி ஒன்றியம்,தாப்பாத்தி  ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 11.97-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,  புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் […]

செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்துகளை கடிதம், மெயில் மூலமும் தெரிவிக்கலாம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்கள் கடந்த ஜனவரி 18-ம் தேதி அமைக்கப்பட்டன. இதில், கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கேஆர்என் ராஜேஷ்குமார் எம்.பி. மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஓவியருக்கு தமிழக அரசின் `கலைச்செம்மல்’ விருது

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை தமிழ்நாடு ஓவிய நுண்கலைகுழு வாயிலாக மரபுவழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளைச் சார்ந்த புகழ்பெற்ற ஓவிய,சிற்பக் கலைகளில் செய்து வரும் அரிய சாதனைகளை பாராட்டும் வகையில் கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தஞ்சை மரபு வழி ஓவியர் வேல்முருகனுக்கு `கலைச்செம்மல்’ விருது வழங்கப்பட்டது. சென்னை இசைக் கல்லூரியில் நடந்த கலைச் செம்மல் விருது வழங்கும் விழாவில் தமிழக […]

கோவில்பட்டி

புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திராநகர் சொர்னா நர்சிங் கல்லூரி கூட்டரங்கில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாணவ, மாணவிகள்  100க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,புற்றுநோய் இல்லாத உலகத்தை படைத்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்திபிரியா தலைமை தாங்கினார். கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வருகிற 17ம்தேதி  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் எட்ட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏ.பி.சி,மகாலட்சுமி மகளிர் கலை கல்லூரியில்  17.2.2024  சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த  வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம். மேலும் தமிழ்நாடு அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவுச்செய்யாத வேலையளிப்போர்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே 40 இலங்கை தமிழர் குடியிருப்புகள் திறப்பு

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் குலத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. குடியிருப்புகளை கனிமொழி எம்.பி.குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

இறைவனின் கணக்கு புத்தகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி பக்கம்

எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன. மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் […]

ஆன்மிகம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி; மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் தொடங்கிய

இந்த ஆண்டு  நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிதலைமையிலானா குழுவினர் இன்று தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர். இதன் முதல் கட்டமாக மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். தூத்துக்குடி வடக்கு – தெற்கு, […]

செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம்;பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்கள் 

தேர்தல் அறிக்கை தொடர்பாக அதிமுகவின் 2வது ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில்  நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன்,  ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து நாளை முதல் கருத்துக் கேட்க உள்ளோம்.  பயண திட்டத்தின் படி நாளை முதல் தொடங்குகிறது.( இன்று) சென்னை,வேலூர் மண்டலம், நாளை  ( 6ம் தேதி) […]

செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உடன் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ம.தி.மு.க.மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து திமுக ஆலோசனை நடத்தியது.  இதில் திமுக சார்பில் டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தை சுமுகமாக […]