• June 7, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உடன் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உடன் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ம.தி.மு.க.மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு குறித்து திமுக ஆலோசனை நடத்தியது. 

இதில் திமுக சார்பில் டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் தெரிவித்தனர். ஏற்கனவே மதுரை கோவை தொகுதியில் வெற்றி பெற்று இருப்பதால் நடைபெற இருக்கும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து மதிமுக குழுவினருடன் திமுக பேச்சு நடத்தியது.

மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜுன ராஜ், செந்தில் அதிபன், ஆவடி அந்திரி தாஸ், டி.சேஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது 2 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியும் மதிமுக சார்பில் கேட்கபட்டது. இதில் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தர திமுக முடிவு செய்ததாக தெரிகிறது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *