• June 7, 2025

தூத்துக்குடியில் வருகிற 17ம்தேதி  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

 தூத்துக்குடியில் வருகிற 17ம்தேதி  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடியில் எட்ட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏ.பி.சி,மகாலட்சுமி மகளிர் கலை கல்லூரியில்  17.2.2024  சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த  வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்.

மேலும் தமிழ்நாடு அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவுச்செய்யாத வேலையளிப்போர்கள் TN private job portal(https://tnprivatejobs.tn.gov.in) என்ற இணையத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள GST & Pan card ஆகிய இரண்டு நகல்களையும் பதிவேற்றம் செய்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் முகாமில் 8ம் வகுப்பு, 1௦ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வித்தகுதியுடைய வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வர் .

முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு எட்டையபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஏ.பி.சி,மகாலட்சுமி மகளிர் கலைக் கல்லூரிக்கு வருகைபுரிந்து இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form- இல்  உங்கள் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

google form

https://forms.gle/XSadVCJt5fjSGLgg6
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *