தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய ஆட்சிப்பணியில் மூத்த அலுவலர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 1).டி.கார்த்திகேயன், செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை- மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூத்துக்குடி மாநகராட்சி, 2)தரேஸ் அகமது, அரசு செயலர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை- ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், […]
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவிக்கிறார்கள். இவர்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 இடங்களில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-‘ தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய 2 நாட்கள் பெய்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளக்காடானது மட்டுமின்றி 6 நாட்களாக மக்கள் தங்கள் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசி நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு […]
115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜே.சி.ஐ.) என்ற அமைப்பின் கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக டி.தீபன்ராஜ் பணியாற்றி வந்தார்.அவரது ஒரு வருட பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 2024 ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ஆர்.எஸ்.வெங்கடேஷ் நியமனம் செய்யபபட்டார. புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி ) கோவில்பட்டி ஜே.சி.பவன் அரங்கத்தில் நடைபெற்றது.. விழா தொடக்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜே.சி.ஐ. உடனடி தேசிய தலைவர் ஆர்.ராஜா கோவிந்தசாமி, கவுரவ […]
விளாத்திகுளம் தாசில்தார் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளத்தால் அழுகி போன மிளகாய் பயிருடன் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார் . இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அய்யலுசாமி, தூத்துக்குடி மாவட்ட தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் வெள்ளதுரை, ஒன்றிய செயலாளர் எல்லப்பராஜ் மற்றும் […]
தூத்துக்குடியில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை மூதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிஞ்சி நகர் டோல்பேட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை பார்வையிட்டார். விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார். எட்டயபுரம் 3 -ம் பாலத்தில் இருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் […]
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மழை நிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுத்து நிவாரண தொகை அறிவிக்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கு நிதி, இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் துண்டிக்கப்பட்ட அனைத்து சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேம்ண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் சரவணா […]
சொத்து குவிப்பில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை கவர்னர் ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கணபதி பட்டி சாய் அமர் நகரில் அமைந்துள்ள மகாதேவா கோவிலில் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் அதிகாலையில் கணபதி ஹோமம் யாகம் பெரிய அளவில் நடத்தப்பட்டது அடுத்தபடியாக 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை மகா மண்டலேஷ்வர் சுவாமி பிரபாகரன்ந்தா சரஸ்வதி, மடாதிபதி ஐயப்பன், சேவாசரம் தேசிய தலைவர் அகில பாரத சன்னியா சபா தேசிய செயலாளர் அகில பாரத் […]
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக பஸ் போக்குவரத்து தொடக்கம்: திருச்செந்தூர் வழி
தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதுமாக முடங்கியது. நகரின் முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது, பல குடியிருப்புகள் சுற்றிமாவட்டத்தை பொறுத்த வரையில் தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிகள் தனி தனி தீவாக காட்சியளித்தது. பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கபட்டது. இதன் காரணமாக தரைவழி போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகள் உடைப்பை சரிசெய்வது, தற்காலிக பாலம் அமைப்பது போன்ற பணிகள் மும்மரமாக […]