தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக பஸ் போக்குவரத்து தொடக்கம்: திருச்செந்தூர் வழி பஸ்கள் நிறுத்தம்

தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதுமாக முடங்கியது. நகரின் முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது, பல குடியிருப்புகள் சுற்றிமாவட்டத்தை பொறுத்த வரையில் தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிகள் தனி தனி தீவாக காட்சியளித்தது.
பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கபட்டது. இதன் காரணமாக தரைவழி போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகள் உடைப்பை சரிசெய்வது, தற்காலிக பாலம் அமைப்பது போன்ற பணிகள் மும்மரமாக நடைபெற்றது.
இதனை அடுத்து முழுமையாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக செல்ல கூடிய அனைத்து பஸ்களும் இன்று காலை முதல் இயக்கபட்டு வருகிறது. இருப்பினும் திருச்செந்தூர் மார்க்கமாக இயக்க கூடிய பஸ்கள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்ல கூடிய வழியில் ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தால் சாலை முற்றிலுமாக சேதமடைந்ததுள்ளது. அதனால் அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினரால் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் இந்த பகுதிகளுக்கு முற்றிலுமாக பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
