கோவில்பட்டி அருகே மகாதேவா கோவிலில் திருவிளக்கு, கோமாதா பூஜை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கணபதி பட்டி சாய் அமர் நகரில் அமைந்துள்ள மகாதேவா கோவிலில் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் அதிகாலையில் கணபதி ஹோமம் யாகம் பெரிய அளவில் நடத்தப்பட்டது
அடுத்தபடியாக 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை மகா மண்டலேஷ்வர் சுவாமி பிரபாகரன்ந்தா சரஸ்வதி, மடாதிபதி ஐயப்பன், சேவாசரம் தேசிய தலைவர் அகில பாரத சன்னியா சபா தேசிய செயலாளர் அகில பாரத் தாதுக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆதிசங்கரா அத்வைத்த அரங்கம் சுவாமிகள் ஆகியோர் நடத்தினர்.
பின்னர் கோமாதா பூஜை நடைபெற்றது. பூஜையை ரகுபட்டர் நடத்தினார்.அதனைத் தொடர்ந்து 501 மரக்கன்றுகளை கோவிலை சுற்றி ஒவ்வொரு ஊராக நட்டினார்கள் விழாவில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த விழாவிற்கு கோவில் ஸ்தாபகர் சுரேஷ் தலைமை தாங்கினார், நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சத்திய சாய் சேவா சமிதி கன்வீனர் ராமகிருஷ்ணன், கோவில் மேல் சாந்தி பிரபாகரணந்தா சரஸ்வதி சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கணபதி பட்டி சிவன் கோவில் ஸ்தாபகர் சுரேஷ் கூறுகையில், “பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை 11 நாட்கள் 108 சன்னியாசிகள் கலந்து கொண்டு உலக மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த யாகத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
