• June 7, 2025

மழை நிவாரணம் கோரி பா.ஜனதா கட்சியினர் மனு

 மழை நிவாரணம் கோரி பா.ஜனதா கட்சியினர் மனு

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மழை நிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் உடனடியாக கணக்கெடுத்து நிவாரண தொகை அறிவிக்க வேண்டும்.  உயிரிழந்த கால்நடைகளுக்கு நிதி, இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும்  துண்டிக்கப்பட்ட அனைத்து சாலைகள் பாலங்கள் ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேம்ண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது

 மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் சரவணா கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் சேது ராஜ், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி ,ஒன்றிய தலைவர்கள் பார்த்திபன், கனகவராஜ், சிவபெருமாள் ,ஒன்றிய பொதுச் செயலாளர் சுப்புராம் ,பெஞ்சமின் பாண்டியன், வெங்கடேசன், பழனி முருகன், சுயம்பு ,மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் லீலாவதி, விவசாய அணி மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, சிந்தனையாளர் மாவட்ட துணை தலைவர் ரமேஷ், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் அருணாச்சலம் உள்பட பலரும் இந்த மனு அளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதே போல் புதூர் மேற்கு மண்டல பா.ஜனதா பொதுசெயலாளர் பெஞ்சமின் பாண்டியன், வட்டாட்சியரிடம் ஒரு மனு அளித்தார், அந்த மனுவில். “தொடர் மழையினால் விளைநிலங்கள் அனைத்தும் அழிந்து போன நிலையில் அதற்கான இன்சூரன்ஸ் தொகையை 100% முழுமையாக வழங்க வேண்டும். இடிந்த வீடுகளுக்கு பண உதவி அல்லது வீடு கட்டி தரும் திட்டம் இதில் எது முடியுமோ அதை செய்து தர வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *