• June 7, 2025

தூத்துக்குடியில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 தூத்துக்குடியில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தூத்துக்குடியில் மழை பாதிப்புகளை மூதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிஞ்சி நகர் டோல்பேட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை பார்வையிட்டார். விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்,

மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார். எட்டயபுரம் 3 -ம் பாலத்தில் இருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் பலர் புனிதமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களை இன்று முதல்-அமைச்சர் மு.,க.ஸ்டாலின் சந்தித்து பாய், போர்வை, அரிசி, பிஸ்கட், பிரட் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.

மு.கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *