• June 7, 2025

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை டிராக்டரில் சென்று பார்வையிட்ட கனிமொழி

 தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை டிராக்டரில் சென்று பார்வையிட்ட கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளக்காடானது மட்டுமின்றி 6 நாட்களாக மக்கள் தங்கள் அன்றாட தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசி நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனிமொழி எம்.பி இம்முகாமிற்கு டிராக்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி நிவாரணங்கள் மற்றும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.ஆய்வின் போது சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.]

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வேடநத்தம் மற்றம் கல்மேடு கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.

சேதமடைந்த வீடுகள்,துண்டிக்கப்பட்ட சாலைகள் போன்றவற்றை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன்  முன்னிலை வகித்தார்கள் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *