• May 9, 2024

Month: November 2023

கோவில்பட்டி

3333 அகல் விளக்குகள் ஏற்றி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் கங்கா ஆரத்தி

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் தெப்பகுளத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 3333அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. தெப்பக்குளத்தின் சுற்றுசுவர், படிக்கட்டுகள் முழுவதும் அகல்விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் ஏற்றினர். கோவில் குருக்கள் மற்றும் பூசாரிகள் தெப்பகுளத்தில் அகல்விளக்குகளை மிதக்க விட்டனர். மேலும் குளத்தில் புனித நீர் ஊற்றி பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். இந்த […]

ஆன்மிகம்

சித்தர்கள் நித்யவாசம்  செய்யும் திருமலைநம்பி மலைக்கோவில்

நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திபெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையை போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்கு திகழும்  மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரை கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாக கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி. திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு […]

தூத்துக்குடி

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 352 மனுக்கள் பெறப்பட்டன.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இணைப்பு சக்கரம் […]

தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் மகாலிங்கம், சாமுவேல், முத்துப்பாண்டி, காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம்பகுதியில் உள்ள அருள்(வயது 50) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் திருகார்த்திகை பூஜை

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில்  உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திரு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பரணி தீபம் இரவு 7 மணிக்கு திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, […]

கோவில்பட்டி

சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கார்த்திகை மகாதீபம்

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று மாலை திருகார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகா  இதையொட்டி மாலையில் பகதர்கள் குவிந்தனர். கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவில் மண்டபத்தில்  முருகப்பெருமான்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருக்கு முன்பாக ராட்சத விளக்கு வைக்கப்பட்டு எண்ணெய் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்கள் எண்ணெய் வாங்கி வந்து ஊற்றினார்கள். இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல்  மூலவராக காட்சி அளிக்கிறது. அந்த […]

கோவில்பட்டி

ஓடைப்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப விளக்குகள்

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி  வன்னி விநாயகர் கோவிலில்  இன்று மாலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது.  மேலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்து இருந்தார்.  மேலும் கோவிலுக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

செய்திகள்

குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்; டி. ஜெயக்குமார்

அ.தி.மு.க வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை, சென்னை காசிமேடு, புனித தெரேசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :- தேர்தல் நேரத்தில்தான் இறந்தவர்கள் உயிரோடு வருகிறார்கள். தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறோம். இறந்தவர்கள், இடமாற்றம் ஆனவர்களை நீக்கிவிட வேண்டும் ஒவ்வொரு முறையும் எழுதி கொடுத்து கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலையா. குளறுபடியில்லாத 100 சதவீதம் சரியான வாக்காளர் […]

செய்திகள்

காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக நெல்லை மகளிர் அணியினர்போராட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்தார்.  இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு. 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; பணிநியமன ஆணைகளை  கீதாஜீவன் வழங்கினார்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு ,முகாம் இன்று  (சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தின. முகாமில் 100-க்கும் மேற்பட தொழில் நிறுவனங்ககளை சேர்ந்தவர்கள் வந்திருந்து பணியாளர்களை  தேர்வு செய்தனர். தூத்துக்குடி மற்றும் பக்கத்து ஊர்களில் இருந்து […]