• May 9, 2024

Month: June 2023

செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் […]

தூத்துக்குடி

பொது கலந்தாய்வு மூலம் 115 போலீசார் இடமாறுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த இந்த கலந்தாய்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் […]

கோவில்பட்டி

தொலைதூர பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்க்க மாணவர்களுக்கு பயிற்சி

கடந்த 1908 ஜூன் 30ம் தேதி ரஷ்யாவில் விண் கற்கள் பூமியில் மோதிய தினத்தை உலக விண்கற்கள் காணும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வான் அறிவியல் கழகத்தின் சார்பில் உலக விண்கற்கள் காணும் தினத்தை முன்னிட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட கோவில்பட்டியில் பள்ளி  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 4 இடங்களில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பு ; கனிமொழி எம்.பி.தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் தடகளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஆக்கி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன பள்ளி, கல்லூரி மாணவ மாணவிக்கான ,மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக  பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் அனைத்தும் அவரவர் வங்கிக் கணக்குக்கு […]

கோவில்பட்டி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி

கோவில்பட்டி கோட்ட கலால்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு சிலம்பாட்ட போட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோட்ட கலால்அலுவலர் பா. செல்ல பாண்டியன் தலைமை தாங்கி, சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, போட்டிக்கான  ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் சுதாகரன், […]

தூத்துக்குடி

21 மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்ற 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிராஜன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், குணசேகரன் மற்றும் போலீசார் கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் ெரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் […]

ஆன்மிகம்

ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு

* நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். * நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். *. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன. *நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்” என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் […]

ஆன்மிகம்

ராகு, கேது , சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபடும் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை. சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த […]

கோவில்பட்டி

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக பொது செயலாளர் செல்லப்பா, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாநில துணை பொது செயலாளர்  பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், பொன் மாடசாமி, தென் மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் […]

கோவில்பட்டி

குடிசை இடங்கள் ஆக்கிரமிப்பு: நரிக்குறவர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி மந்திதோப்பு நரிக்குறவர் காலனியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினர் கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தில் ஈயம் பூசும் தொழிலாளர்கள் வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- எங்கள் சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட சர்வே நம்பர் 109 இல் ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள், குடிசைகள் அமைத்து வசித்து வருகிறோம்.இந்த நிலையில் ஈயம் பூசும் தொழிலாளர்கள் […]