எம்.எல்.ஏ.வை பின்புறம் உட்கார வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணி மேற்கொண்டார். அவருடன் அந்த பகுதி அதிகாரிகள் மற்றும் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் சென்று இருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வட்டம் பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி பேரூராட்சிகள் மற்றும் 308 கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு 9 உறை கிணறுகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த உரை கிணறுகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்றார். அப்பகுதிக்கு கார் செல்ல முடியாது என்பதால் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உடனடியாக இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கூறினார். இதை தொடர்ந்து அதிகாரிகள் மோட்டார் சைக்கிள்கள் ஏற்பாடுசெய்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவருடன் பின் இருக்கையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அமர்ந்து கொண்டார்.
எம்.எல்.ஏ.வை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர வைத்து கலெக்டர் செந்தில்ராஜ் உறை கிணறுகள் உள்ள பகுதிக்கு ஓட்டிசென்றார். அவரை தொடர்ந்து அதிகாரிகள் மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர்.ஆய்வு கிணறுகளை ஆய்வு செய்தபிறகு திரும்பவும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் மோட்டார் சைக்கிளில் எம்.எல்.ஏ வை ஏற்றிக்கொண்டு சென்றதை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்,
