போதை ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (26/06/2023) திங்கட்கிழமை, தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியை தி.மு.க. நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பச்சை கோடியை அசைத்து தொடங்கி வைத்தார்.
அமைச்சர் .அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் .ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி, பனிமய மாதா ஆலயம் வழியாக ஆயுதப்படை மைதானம் வரை சென்று நிறைவடைந்த்தது
