• June 6, 2025

Month: March 2023

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 5 ஆண்டுகளாக  நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயங்க

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம் ஊராட்சி அனந்தமாடன் பச்சேரி கிராமத்தில் 5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடியில் இருந்து அனந்தமாடன் பச்சேரி வழியாக குளத்தூர் செல்லும்  53 D அரசு நகர பேருந்தை மீண்டும் இயக்க வழிவகை செய்து தருமாறு கிராம பொதுமக்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  உயர்திரு எம் சி.சண்முகையா அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.. இதயனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மேற்கொண்ட  நடவடிக்கையின் பேரில் அனந்தமாடன்பச்சேரியில் மீண்டும் அரசு நகர பேருந்து வந்து செல்ல வழிவகை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ஆலோசனை  கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,.மாவட்ட அவைத்தலைவர் .செல்வராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற  உறுப்பினர் மார்கண்டேயன், ,தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன்,தூத்துக்குடி மாநகர மேயர் .ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். .கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான .கீதாஜீவன்  கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பற்றி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மகளிர்தின விழா

கோவில்பட்டி பாக்யா மஹாலில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக  உலக‌‌ மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  ஜெய்கிறிஸ் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.  துணை போலீஸ் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் விநாயகா ரமேஷ், அபிராமி குழுமம்  இயக்குனர் அபிராமி முருகன், ஆசியா பாம்ஸ் பாபு , கணேஷ் பேக்கரி நிறுவனர் ரவி மாணிக்கம், அட்வகேட்  சந்திரசேகர் மருத்துவர் சீனிவாசகன் […]

கோவில்பட்டி

ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் ஜே.சி.ஐ. சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு ஜே.சி.ஐ. அமைப்பின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மதிய உணவை வழங்கினர்.  இதேபோல் செமபுதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கும் தேவையான பொருட்கள் மற்றும் மதிய உணவினை வழங்கினர். காப்பகத்தில் இருக்கும் பெண் ஒருவர் சிறப்பாக பாடல் பாடி  வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் […]

பொது தகவல்கள்

கோடை காலத்தில் தினமும் மோர் பருகுவது எவ்வளவு நல்லது?

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்ப நிலை பதிவாகி அதிரவைத்துவிட்டது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானது. மற்ற மாதங்களை விட கோடை காலங்களில் மோர் பருகுவது உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும். அதில் உள்ள பொட்டாசியம் உடலில் திரவ சமநிலையை மேம்படுத்தும். பாலை விட மோரில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தொல்லை கொடுத்த  4  குரங்குகளை பிடித்த வனத்துறையினர்

கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றி வந்தன. இதனால் அலுவலகம் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் அந்த பகுதியை கடப்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர், இதனால்  குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பி.எஸ்.என்..எல். ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்,. இதை தொடர்ந்து கோவில்பட்டி வனச்சரக  அலுவலர் பி.பாரதி , வனவர் கே.கேசவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று கூண்டுகளை அந்த பகுதியில் வைத்தனர். இதில் 4 குரங்குகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நள்ளிரவுக்கு பிறகு  மினி பஸ்கள் அனுமதி பெற்று இயங்குகிறதா? ஆட்டோ டிரைவர்கள்

கோவில்பட்டி கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மந்திரமூர்த்தி, செல்வகுமார், செல்வன், கணேசன், கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோட்டாட்சியர்  மகாலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- ரெயில் நிலையம் முன்பு நள்ளிரவில் இரண்டு மணி முதல் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன,. இதனால் ரேயில் நிலையம் முன்பு ஆட்டோ […]

செய்திகள்

ஓடும் பஸ்சில் நகை அபேஸ் ; தூத்துக்குடி பெண்கள் 3 பேர் கைது

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர் சுனிதா (வயது 39). இவர் அம்மாண்டிவிளைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் அபேஸ் செய்யப்பட்டது. நகையை பறிகொடுத்த சுனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். = ராஜாக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய 3பெண்கள் மீது தங்கு சந்தேகம் இருபதாக அவர் சொல்லி இருந்தார்,. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், மேலும் சுனிதா […]

தூத்துக்குடி

தமிழகத்தில் அரசியல், அதிகார மாற்றம் நிச்சயம் நடக்கும்; அண்ணாமலை பேச்சு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிந்து தற்போது 10-வது […]

செய்திகள்

சட்டபேரவை ஜனநாயக மரபுகளை சபாநாயகர் சீர்குலைத்து விட்டார் ; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க. தொகுதி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் சூதாட்டம் மசோதா தாக்கல் செய்தபோது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பன்னீர் செல்வத்தையும் பேச அழைத்தார் பேரவை தலைவர்.தமிழக அரசு கொண்டுவரும் மசோதா மீது ஒரு […]