அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்பதித்து வருகின்றனர். நீதித் துறையிலும் பல்வேறு பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக் கொண்டே செல்வர். அத்துடன் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை […]
தேசிய அளவில் 32 -வது சப் ஜூனியர் மகளிர் கபடி போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப் ஜூனியர் வீராங்கனைகள் அணி தேர்வு சேலத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்த தேர்வில் கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் விளையாடும் மாணவி கற்பகவள்ளி தமிழ்நாடு மகளிர் அணிக்காக தேர்வாகியுள்ளார்.கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகளான கற்பகவள்ளிக்கு தூத்துக்குடி […]
இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது பட்டியலில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியிலஇந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து […]
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் `மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வகையில், பனை விதைகள் நடும் நிகழ்ச்சி அ.தி.மு.க. நிர்வாகி பி.கே நாகராஜன் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு இலுப்பையூரணி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, […]
கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றில், பல ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள்.இதை தொடர்ந்துஅமைச்சர் கீதாஜீவன், மற்றும் கனிமொழி எம்.பி.,ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன், மற்றும் கனிமொழி ஆகியோர் தெரிவித்தனர்.ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் […]
தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கவுதமன். 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய இவர், 2010 ஆம் ஆண்டு “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக “சந்தனக்காடு” மற்றும் “ஆட்டோ சங்கர்” ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளதற்போது கவுதமன் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் “மாவீரா” திரைப்படம் சண்டைக் காட்சிள் நிறைந்தது.இந்த படத்தில் வரும் 5 சண்டைக் காட்சிகளையும் […]
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.]மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1-ம் தேதி சீரானது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.இந்த சூழலில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்: கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் தொடக்கம்
கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 நாள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்.தமிழகம் முழுவதும் லைட்டர்களை தடை செய்து தீப்பெட்டி தொழிலை பாதுக்காதிடவேண்டும். கோவில்பட்டி நகர இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக புதிய தொழிற்சாலை உருவாக்க வேண்டும். கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலை மற்றும் வாறுகால் சரி செய்திட வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடை பயணம் நடக்கிறது. […]
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவான இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளன. மேலும் அவரது படைப்புகள் அடங்கிய நூலகம் இடம் பெற்றுள்ளது.இந்த மணி மண்டபம் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செலகத்தில் இருந்து காணொளி காட்சி […]
கோவில்பட்டி புதுரோட்டில் பள்ளிக்கூட வாசலில் மினி பஸ்சை நிறுத்தும் டிரைவர்கள்; நடவடிக்கை கோரி
கோவில்பட்டி நகரில் புதுரோடு என்பது மிகவும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலை ரெயில் நிலையம் மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தகூடியவை.இந்த சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்து இருக்கும் சூழலில் டிவைடர் போட்டு சாலையை இரண்டு வழிப்பாதையாக மாற்றி இருக்கிரார்கள். கண்ட இடத்தில் சாலையில் திரும்பமுடியாது. அதற்கான இடத்தில் தான் திரும்ப வேண்டுமபுதுரோட்டில்-கடலையூர் ரோடு சந்திப்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. புதுரோடு இறக்கத்தில் இருந்து கடலையூர் ரோட்டுக்கு இடதுபுறம் திரும்ப வேண்டும். அந்த வழியாக செல்லும் மினி […]