மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்: கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் தொடக்கம்

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 2 நாள் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் லைட்டர்களை தடை செய்து தீப்பெட்டி தொழிலை பாதுக்காதிடவேண்டும். கோவில்பட்டி நகர இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக புதிய தொழிற்சாலை உருவாக்க வேண்டும். கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலை மற்றும் வாறுகால் சரி செய்திட வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடை பயணம் நடக்கிறது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து இன்று சனிக்கிழமை காலை நடை பயணம் தொடங்கியது,தொடக்க விழாவுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர செயலார் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நடைபயணத்தை மாநில குழு உறுப்பினர் கே.அர்ஜுனன் தொடக்கி வைத்தார்.
கட்சி கொடியேந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பியபடி நடைபயணம் புறப்பட்டு சென்றனர். நடை பயணத்தில் பெண் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர், மொத்தத்தில் 40க்கும் மேற்பட்டோர் நடந்து செல்கிறார்கள்.
போகும் வழியில் பசுவந்தனை, ஓட்டபிடாரம், புதியம்புத்தூர் வழியாக நடை பயணம் மேற்கொண்டு மொத்தம் 60 கிலோ மீட்டர் பயணம் செய்து நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை தூத்துக்குடி சென்றடைகிறார்கள்.
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபயணம் நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது, கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலளார் ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாநில குழு உறுப்பினர் பூமயில் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்
இதே போல் ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூரில் இருந்தும் தூத்துக்குடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் தொடங்கினார்கள்.
