• June 7, 2025

கி.ராஜநாராயணன் மணி மண்டப விழா: கனிமொழி, எழுத்தாளர்கள் புகழாரம்

 கி.ராஜநாராயணன் மணி மண்டப விழா: கனிமொழி, எழுத்தாளர்கள் புகழாரம்

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவான இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளன. மேலும் அவரது படைப்புகள் அடங்கிய நூலகம் இடம் பெற்றுள்ளது.
இந்த மணி மண்டபம் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல் அமைச்சர் மு.க,ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து மாலையில், மணி மண்டபத்தில் கலை இலக்கிய மாலை விழா நடைபெற்றது.
கனிமொழி எம்,பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு புகழாரம் சூட்டினார். அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள்
ராமகிருஷ்ணன், பூமணி, சோ.தர்மன், மற்றும் எழுத்தாளர்கள்
கோணங்கி, பவா செல்லத்துரை ஆகியோரும் கி,ராஜநாரயணனுக்கு புகராரம் சூட்டி பேசினார்கள்.
விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர்
கண்ணபிரான் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *