சூறாவளி காற்றில் பயிர்கள் சேதம்: கீதாஜீவன், கனிமொழி ஆய்வு

கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றில், பல ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்துஅமைச்சர் கீதாஜீவன், மற்றும் கனிமொழி எம்.பி.,ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன், மற்றும் கனிமொழி ஆகியோர் தெரிவித்தனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்
