தமிழக சப் ஜூனியர் மகளிர் கபடி அணிக்கு கோவில்பட்டி மாணவி தேர்வு

தேசிய அளவில் 32 -வது சப் ஜூனியர் மகளிர் கபடி போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக சப் ஜூனியர் வீராங்கனைகள் அணி தேர்வு சேலத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வில் கோவில்பட்டி மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் விளையாடும் மாணவி கற்பகவள்ளி தமிழ்நாடு மகளிர் அணிக்காக தேர்வாகியுள்ளார்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகளான கற்பகவள்ளிக்கு தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக நிர்வாகிகள், பயிற்சியாளர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
