கோவில்பட்டியில் நள்ளிரவில் துணிகரம்: கோவிலில் புகுந்த திருடன், அம்மனின் தங்க தாலியுடன் தப்பி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபதி கோவில், வடக்கு இலுப்பையூரணியில் உள்ளது. இக்கோவில் அர்ச்சகராக அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். கோவிலில் இரவு காவல் பணியில் கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி இருந்தார். இரவு 9.45 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. இதனால் காவலாளி வேலுச்சாமி, கோவில் கதவுகளை பூட்டிவிட்டு படுத்து விட்டார்நள்ளிரவு 12.30 மணியளவில் கோவில் […]