• June 6, 2025

Month: November 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நள்ளிரவில் துணிகரம்: கோவிலில் புகுந்த திருடன், அம்மனின் தங்க தாலியுடன் தப்பி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபதி கோவில், வடக்கு இலுப்பையூரணியில் உள்ளது. இக்கோவில் அர்ச்சகராக அதே ஊரைச் சேர்ந்த சிவகுமார் உள்ளார்.நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். கோவிலில் இரவு காவல் பணியில் கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி இருந்தார். இரவு 9.45 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. இதனால் காவலாளி வேலுச்சாமி, கோவில் கதவுகளை பூட்டிவிட்டு படுத்து விட்டார்நள்ளிரவு 12.30 மணியளவில் கோவில் […]

செய்திகள்

திகார் சிறையில் மந்திரிக்கு மசாஜ்; மத்திய உள்துறை விளக்கம் கேட்கிறது

கெஜ்ரிவால் அரசில் மந்திரியாக இருக்கும் சத்யேந்தர் ஜெயின், பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ளார்.இவர் மீது அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.சத்யேந்திர ஜெயின் மனைவி பூனம் ஜெயினுக்கு, அவரது அறைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர் திட்டமிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் அங்கேயே இருக்கிறார்.சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என […]

கோவில்பட்டி

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியங்குளம் கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார், கோவில்பட்டி கோட்கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் விஜயஸ்ரீ முன்னிலை வகித்தார். முகாமை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தொடக்கி வைத்தார்.இம்முகாமில் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும அவற்றுக்கான தீர்வு காண்பது பற்றியும் பொதுமக்களுக்கு […]

செய்திகள்

பாலியல் பலாத்கார வழக்கில் லஞ்சம்: கான்ஸ்டபிள் ஆக டி.எஸ்.பி. பதவி இறக்கம்- உ.பி.முதல்வர்

உத்தர பிரதேசத்தில் 2021-ம் ஆண்டு பெண் ஒருவர் போலீசில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.இந்த வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை செய்து வந்துள்ளார். அதன்பின்பு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். எனினும், போலீசார் தனது புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் […]

தூத்துக்குடி

கல்லறை திருநாள்: மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்தனர். அந்த வகையில் தமிழகத்திலும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள், மறைந்த தங்கள் உறவுகளின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.மதுரை மாவட்டத்தில் பங்கு ஆலயங்களைச் சேர்ந்த அனைத்து கல்லறைத் தோட்டங்களிலும் மறைந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்கள் கல்லறைகளில் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் ஜெபம் செய்தனர்.அதே போல் கோவையில் உள்ள […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்ற ஓட்டல்; மக்கள் குவிந்தனர்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் பைபாஸ் ரோடு பாலத்தின் பக்கவாட்டில் சாத்தூர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் புதிதாக இன்று அமுதம் சைவம் மற்றும் அசைவ உணவகம் திறக்கப்பட்டது. தென் இந்திய பாரம்பரிய மண்பானை மற்றும் வடஇந்திய உணவு வகைகள் இங்கு பரிமாறப்படுகின்றன.ஓட்டல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் தால்சா ஆகியவை வெறும் 10 ரூபாய்க்கு பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதை தொடர்ந்து 11.30 மணிக்கே கூட்டம் […]

செய்திகள்

சென்னையில் மழைக்கு பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கினார் டி.ஜெயக்குமார்

சென்னை புளியந்தோப்பில் மழையால் வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் சைக்கிள் ரிக்சா தொழிலாளியின் மனைவி பலியானார்.இந்த பகுதியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று ( 2/11/22) பார்வையிட்டு இறந்து போன பெண்ணின் கணவருக்கு ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டி,ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- நேற்று இரவு 7.15 மணியளவில் இந்த துயர இந்த சம்பவம் நடைபெற்றது. அதன் பின்பு ஆம்புலன்ஸ் எதுவும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.பலத்த மழை காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை அகற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.தூத்துக்குடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் டூவிபுரம், பண்டுகரை சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.இதேபோல் […]

தூத்துக்குடி

கொலை, கொள்ளை வழக்குகள்: ஒரே நாளில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் மீது ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 7.10.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பொன்னம்மாள் (45) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூக்கன் மகன் இசக்கிப்பாண்டி (32) மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர்.அதேபோன்று கடந்த 1.10.2022 அன்று சாத்தான்குளம் மகாராஜா கோவில் தெருவை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி : 61 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு

தமிழக காவல்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.1997 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 61 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆணை பிறப்பித்துள்ளார். காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள 61 தலைமை காவலர்களும் சிறப்பாக பணியாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தினார்