• June 7, 2025

கொலை, கொள்ளை வழக்குகள்: ஒரே நாளில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

 கொலை, கொள்ளை வழக்குகள்: ஒரே நாளில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் மீது ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7.10.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பொன்னம்மாள் (45) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூக்கன் மகன் இசக்கிப்பாண்டி (32) மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோன்று கடந்த 1.10.2022 அன்று சாத்தான்குளம் மகாராஜா கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரகாந்த் (26) என்பவரிடம் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்த வழக்கில் செய்துங்கநல்லூர் சிவனனைந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மலையாண்டி மகன் சுடலைமுத்து (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்குகளின் எதிரிகளான இசக்கிப்பாண்டி மற்றும் சுடலைமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் அறிக்கை அளித்தார்.
கடந்த 4.10.2022 அன்று கயத்தார் செட்டிக்குறிச்சி, மஞ்சநம்பி கிணறு பகுதியை சேர்ந்த அழகுதுரை (28) என்பவரை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கே. கரிசல்குளம் பகுதியை சேர்ந்த மாடசாமி (எ) மாடக்கண்ணு மகன் பட்டுராஜ் (29), அங்கையற்கண்ணி மகன் நாகராஜன் (38), கடல் (எ) மருதுபாண்டியன் மகன் முருகன் (எ) பாலமுருகன் (29), கொடுங்கால பாண்டியன் மகன் மாரியப்பன் (எ) ஸ்டாலின் (31) மற்றும் கயத்தார் மஞ்சநம்பிகிணறு பகுதியை சேர்ந்த சின்ன குருசாமி மகன் கனகராஜ் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான பட்டுராஜ், நாகராஜன், முருகன் (எ) பாலமுருகன், மாரியப்பன் (எ) ஸ்டாலின் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையை ஏற்று குறிப்பிட்ட 7 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் குறிப்பிட்ட 7 பேர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 229 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *