தூத்துக்குடி : 61 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு

தமிழக காவல்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.1997 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 61 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆணை பிறப்பித்துள்ளார்.
காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள 61 தலைமை காவலர்களும் சிறப்பாக பணியாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தினார்
