• June 6, 2025

கவர்னர் ரவியை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம் தி.மு.க. மனு – ஆதரவு தெரிவித்து வைகோ கையெழுத்து

 கவர்னர் ரவியை திரும்ப பெறக்கோரி ஜனாதிபதியிடம்  தி.மு.க. மனு – ஆதரவு தெரிவித்து வைகோ கையெழுத்து

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார். ஒத்த கருத்து உடைய எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து கோரிக்கை மனுவை படித்துப் பார்த்து கையெழுத்திட டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். பின்னர் மனுவை படித்துப் பார்த்து அதில் அவர் கையெழுத்திட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;- “கவர்னர் என்பவர் ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு உதவியாக, அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டியவர்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, இதற்கு விரோதமாக செயல்படுகிறார். நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. தமிழ்நாட்டின் கவர்னராக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவராக உள்ளார். எனவே அவரை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்புகிறோம்.”

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *