• June 7, 2025

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

 கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடியங்குளம் கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார், கோவில்பட்டி கோட்
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் விஜயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

முகாமை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் தொடக்கி வைத்தார்.
இம்முகாமில் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும அவற்றுக்கான தீர்வு காண்பது பற்றியும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் சிறந்த கால்நடை பராமரிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கவுரிசங்கர், ஓசநூத்து கால்நடை ஆய்வாளர் முருகன், ஒட்டநத்தம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பார்வதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *