• June 7, 2025

பாலியல் பலாத்கார வழக்கில் லஞ்சம்: கான்ஸ்டபிள் ஆக டி.எஸ்.பி. பதவி இறக்கம்- உ.பி.முதல்வர் அதிரடி

 பாலியல் பலாத்கார வழக்கில் லஞ்சம்: கான்ஸ்டபிள் ஆக டி.எஸ்.பி. பதவி இறக்கம்- உ.பி.முதல்வர் அதிரடி

உத்தர பிரதேசத்தில் 2021-ம் ஆண்டு பெண் ஒருவர் போலீசில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை செய்து வந்துள்ளார். அதன்பின்பு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். எனினும், போலீசார் தனது புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் அப்போது கூறினார்.
இந்த வழக்கில், குற்றவாளிகளிடம் இருந்து போலீசார் லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து, அரசு நிர்வாகம், ராம்வீரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவும் போடப்பட்டது.
தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், இந்த வழக்கில் சர்மா லஞ்சம் பெற்ற விவரம் தெரிய வந்தது. அவர், பலாத்கார வழக்கு விசாரணையில், குற்றவாளிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய வீடியோ அரசின் கவனத்திற்கு சென்றது.
இதனால், பணியிடை நீக்கத்தில் இருந்து வந்த வித்யா கிஷோர் சர்மாவை பதவியிறக்கம் செய்யும்படி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதுவரை இல்லாத வகையில், முதல்-மந்திரியின் இந்த அதிரடி உத்தரவால் டி.எஸ்.பி. பணியில் இருந்து மீண்டும் வித்யா கிஷோர் சர்மா முதன்முதலாக அவர் போலீசில் சேர்ந்த கான்ஸ்டபிள் பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *