கந்த சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். *வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும். *லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும். *கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும். முக வசீகரம் ஏற்படும். *செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். *சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை […]
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, விஜயாபுரி, எப்போதும் வென்றான், எம். துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கிறது.எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரங்கள், மற்றும் கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் தெரிவித்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., இன்று (27.10.2022) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தூத்துக்குடி தச்சர் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை , .கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர்.கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன் , ஆணையர் த.சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் 1ஆம் கேட் அருகில் புதிதாக கட்டியிருக்கும் வணிக வளாகத்தில் ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தை கனிமொழி […]
தூத்துக்குடியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். இந்நிலையில், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.தூத்தக்குடி மாவட்டத்தில் மேலும் பல்வேறு ஊர்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் […]
அரிவாளால் வெட்ட ஓங்கிய வாலிபரை துடைப்பத்தால் விரட்டியடித்த தாய்-மகள்; கோவில்பட்டியில் பரபரப்பு சம்பவம்
கோவில்பட்டி அத்தைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்களது வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று இவர்களது வீட்டின் எதிரே உள்ள வீட்டில் கோழி திருட்டு போனது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது லாவண்யாவின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர், லாவண்யாவின் குடும்பத்தினர் […]
தமிழகத்தில் 9,791 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான பிரீத்தி (வயது 28), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) ஆகிய 3 பேரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.இவர்களில் பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-வருகிற 30ந் தேதி அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மாலை சூட்டப்படவிருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதியும், உரிய […]
கோவில்பட்டி அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; வேதனையில் தவிக்கும் விவசாயிகள்
கோவில்பட்டி அருகே குருமலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் 3 ஆயிரம் ஏக்கர் மானாவரி நிலம் உள்ளது. இங்கு விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடுவது வழக்கம். இங்குள்ள விவசாயிகளுக்கு இன்சூரன்சும் கிடையாது. பயிர் காப்பீடும் கிடையாது.இதன் காரணமாக விவசாயிகள் மழைக்காலங்களில் பயிரிடும் பயிர்களுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள்.இதற்கு குறுமலையில் உள்ள காட்டுப்பன்றிகளே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மலையில் இருந்து இரவு நேரத்தில் இறங்கும் காட்டுப்பன்றிகள் மக்காசோளம் விதைத்தவுடன் குழி பறித்து விதைகளை […]
பசும்பொன் செல்லவில்லை: சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும்.அதே போல் இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள்.தேவர் […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் பேச்சியம்மாள் செளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் […]