கந்தசஷ்டி கவசத்தின் மகிமைகள்
![கந்தசஷ்டி கவசத்தின் மகிமைகள்](https://tn96news.com/wp-content/uploads/2022/10/660bfff6-d656-4e28-b96f-85ef35d67d30-850x560.jpg)
கந்த சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.
சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.
*வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.
*லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும்.
*கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபருக்கு புகழ், மதிப்பு கூடும். முக வசீகரம் ஏற்படும்.
*செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியை படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
*சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை சஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.
*கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.
*கந்த சஷ்டி கவசம் என்பது சாதாரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.
*முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் சஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்..எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)