தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி, இன்று சுற்றுப்பயணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., இன்று (27.10.2022) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தூத்துக்குடி தச்சர் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை , .கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர்.கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன் , ஆணையர் த.சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 1ஆம் கேட் அருகில் புதிதாக கட்டியிருக்கும் வணிக வளாகத்தில் ஓலைப்புட்டு இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
இன்று மாலை 4 மணி அளவில் விளாத்திகுளத்தில் வைப்பாற்றுகரை ஓரத்தில் 25 லட்சம் பனைமர விதை நடுதல்மாலை 5 மணி அளவில் கோவில்பட்டி இலுப்பையூரணியில் பாராளுமன்ற நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய வாட்டர் டேங்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தல்மாலை 5.30 மணி அளவில் கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் புதிய பூங்கா திறந்து வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி.மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
