• June 6, 2025

Month: May 2022

செய்திகள்

ஆடு வியாபாரி `போக்சோ’ வில் கைது

தென்காசி மாவட்டம் சொக்கநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45). ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இவருக்கும், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவருக்கும் வியாபாரம் தொடர்பாக நட்பு ஏற்பட்டது. இதனால் ஜெயபால் ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு செல்லும்போது, அந்த நண்பரின் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதன் காரணமாக அந்த சிறுமி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள்.அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு […]

செய்திகள்

சாத்தூர் அருகே லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது

விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் போலீசாருக்கு நேற்று இரவு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாத்தூர் போலீசார், சாத்தூர்- கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை விரட்டி சென்றனர். அந்த லாரியை பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.லாரியை விரட்டி சென்ற போலீசார் சோதனை செய்த போது லாரியில் […]

தூத்துக்குடி

தம்பியை குத்திக்கொன்ற ராணுவ வீரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமுடிமன் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது 22) ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மாலினி என்ற மனைவியும், மகிஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர். இவரது அண்ணன் செல்வகுமார் (24). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சாத்தூர் அமீர்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திக் தனது தாயாரிடம் 3.5 பவுன் நகையும் ரூ.1.5௦ லட்சமும் வாங்கினாராம். இதையறிந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மாலையம்மன் கோவில் பொங்கல் விழாவில் திருக்கல்யாணம்

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வார் மாலையம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 13-ம் தேதி நாட்டுகால் நடுதலுடன் தொடங்கியது,அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு முன்புறம் சாலையின் ஒரு பகுதியில் அடுப்பு பற்ற வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.சுவாமி -அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து […]

செய்திகள்

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோவில் வைகாசி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வைகாசி திருவிழா இன்று (மே27) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வழி பக்தர்கள் அய்யா ” சிவ சிவ அரகரா அரகரா ” என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால லோகாதிபதி, […]

தூத்துக்குடி

பாலியல் புகார் : துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி இறக்கம்- கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக .நாராயணன் என்பவர் இருந்தார்.இவர் முன்னதாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இறுதி உத்தரவாக தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலைகள் கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவிஇறக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கலெக்டர் […]

சிறுகதை

கொள்ளையர்களின் இறுதி முடிவு …(சிறுகதை)

அந்த கடைவீதியில் போலீசார் வந்து குவிந்தார்கள்….துப்பறியும் மோப்ப நாய் விரைந்து வந்தது. கடைவீதியில் இருந்த வட்டிக்கடைமுன் மக்கள் கூட்டம்..அந்தகடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்திருந்தார்கள். நகைகளை அடகுவைத்தவர்கள் நகை போச்சே என்று அழுதுகொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் சலீம் காரில் வந்தார்.அடகு கடையை சுற்றிவந்தார்.எந்த கும்பலின் கைவரிசை இது…கையில் வைத்திருந்த லத்தியை சுழற்றியவாறு சிந்தனையை ஓடவிட்டார். அடகு கடைக்காரரிடம் விசாரணை நடந்தது. நைட்டு பத்து மணிக்கு கடையை பூட்டிவிட்டு போனேன்.. காலையிலே வந்துபார்த்தா […]

ஆன்மிகம்

உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் சிறப்புகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று உத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உத்தரகோச மங்கை ஆலயம் உள்ளது.இதுவே உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக […]

சினிமா

ஆர்.ஜே.பாலாஜியின் `வீட்ல விசேஷம்’ டிரைலர் வெளியானது

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. இந்த திரைப்படம் தமிழில் ‘வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.தமிழ் ரீமேக்கை என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுரோட்டில் வடிகால் அமைக்கும் பணி; அடுத்து என்ன செய்யவேண்டும்?

கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை புதுரோடு ஆகும். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கும், சாத்தூர், சிவகாசி வழியாக வரும் வரும் வாகனங்கள் தூத்துக்குடி செல்வதற்கும் இந்த புதுரோடு தான் பிரதான சாலையாகும். இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் அதிகம் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும். எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுவார்கள்பல […]