சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளு, குளு சீசனையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 24-ந்தேதி பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களாலான திருவள்ளுவர் சிலை, மயில் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. முதன்முறையாக 6 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.இதனிடையே நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தனர். இதன் காரணமாக சுமார் 10 […]
கோவையை அடுத்த சூலூரை சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-நான் கோவையில் உள்ள ஒரு பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது தந்தை கோவை மத்திய சிறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதே சிறையில் காவலராக பணியாற்றிய ரவிக்குமார் (வயது 31) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்.நாங்கள் கோவையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த போது, ரவிக்குமாரும் அதே பகுதியில் குடியிருந்தார். இதனால் எனக்கும், […]
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தேசிய கேலோ இந்தியா ஆக்கி போட்டி. ஜூன் 4-ந் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்ச குலா என்ற இடத்தில் நடைபெற உள்ளது.இதில் தமிழ் நாடு அணியின் சார்பாக விளையாட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீராங்கனை. அ. அன்னபாக்கியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-சென்னையில் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் , அதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதற்கு பிரதமருக்கு நன்றி.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம் குழப்பம் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது .அ.தி.மு.க. ஆட்சியில் கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்ட போது ஒரு கோடியே […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவன்வடலி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). உப்பள தொழிலாளி. இவருடைய மனைவி முத்து சந்தனம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலையில் சண்முகராஜ் தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.தலைவன்வடலியை அடுத்த ஆரையூர் கல்வெட்டி பகுதியில் சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று சண்முகராஜை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் […]
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன் மற்றும் அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் கொடை விழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.கொடை விழாவை முன்னிட்டு நாளை காலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 3-ந்தேதி காலையில் காப்புக்கட்டுதல், 5-ந் தேதி அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முன்பு விளக்கு பூஜை நடைபெறுகிறது.6-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் ஊர் விளையாடல் அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு […]
கயத்தாறு பஜாரில் ராஜாபுதுக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை பயன்படுத்துவதை ரோந்து சென்ற போலீசார் கண்டு பிடித்தனர். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட பெட்டிக்கடையில் புகையிலை பொருளை வாங்கியதாக தெரிவித்தான்.அந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். கடையில் சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ குட்கா மற்றும் 58 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர்களான உச்சினிமாகாளி(வயது 37), மணிகண்டன்(30), சுடலைமணி( […]
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கேரளாவில் சென்டிரிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு தினேஷ் பாபு (வயது 20) என்ற மகனும், கிருஷ்ணபிரியா (16) என்ற மகளும் உண்டு. தினேஷ்பாபு கோவில்பட்டியில் உள்ள கல்லூரியிலும், கிருஷ்ணபிரியா தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பும் படித்து வந்தனர்.ராஜ்குமாரின் சொந்த ஊரான கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்து குமாரகிரியில் நேற்று முன்தினம் கோவில் கொடை விழா நடந்தது. எனவே சண்முகத்தாய் தன்னுடைய மகன் […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற மணி(வயது 40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியான இவர் பாளையங்கோட்டையில் தொழில் செய்வதையொட்டி சுப்பிரமணி குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல பாண்டியாபுரம் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த சிங்கராஜ் மகன் அருணாசலம் (வயது 45) மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பை சேர்ந்த சேர்ந்த கனகராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் […]