தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,திருநெல்வேலி பொருநை மருத்துவமனை ஆகியவை சார்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் தாமோதரக்கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட தலைமை உதவி ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, பொருறை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் மருத்துவ முகாமினை தொடக்கி வைத்தார். […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் கோவில்பட்டி நகர அதிமுக வார்டு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமை தாங்கி,ஆலோசனைகளை வழங்கினார். நகரச்செயலாளர் விஜயபாண்டியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் செண்பகமூர்த்தி, கவியரசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி,ஜெ பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன்,ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி அம்பிகை பாலன்,முன்னாள் நகர […]
சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 4 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பாக, கிளைச் செயலாளர் சக்தி செல்லப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் ஆகியவை சார்பாக வேலூரில் வருகிற 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் தூத்துக்குடி , நீலகிரி, செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்ட அணிகள் “E” பிரிவில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. சிறப்பாக விளையாடும் வீரர்களை […]
காஷ்மீர் பகல்ஹாமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து இந்திய அரசு மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரித்தும் முப்படை வீரர்களின் வீரத்தையும்,தியாகத்தையும் போற்றும் வகையில் கோவில்பட்டியில் (திரங்கா யாத்திரை)தேசிய கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த இந்த பேரணி மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு,மாதாங்கோவில் ரோடு,எட்டயபுரம் ரோடு வழியாக காந்தி […]
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி 50 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் இன்று அதிகாலை புறப்பட்டு வந்தது. 530 மணி அளவில் கரூர் வெண்ணெய்மலை அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய பஸ், சாலையின் நடுப்புற தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது, இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ் மோதியதில் டிராக்டர் இழுத்து செல்லப்பட்டு வேன் மீது மோதியதில் டிராக்டருக்கு அடியில் வேன் சிக்கிக்கொண்டது. வேனில் […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே நாரைக்கிணறு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் நாரைக்கிணறு பகுதியில் 3 உயர் மின்னழுத்த மின் கம்பங்கள், மற்றும் 10 சிறிய மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. 10-க்கும் மேற்பட்ட வேப்பமரம், அத்திமரம் உள்ளிட்ட மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் 3 வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து தலைமையில், உதவி மின் […]
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சங்கர் கணேஷ் மகன்கள் ஹரிகரன், செந்தில் நாதன். இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நன்றாக படிப்பவர்கள். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இரட்டை சகோதரர்களான ஹரிகரன், செந்தில் நாதன் இருவரும் ஒரே மாதிரியாக 500க்கு 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ஹரிகரன் தமிழில் 94, ஆங்கிலத்தில்91, கணிதத்தில் 83, அறிவியல் 94, சமூக அறிவியல் […]
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சமூக தணிக்கை நடைபெற்று சமூக தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாலாட்டின் புதூர் கிராம ஊராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை மே-12ம் தேதி முதல் 16ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர் மணி […]
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் பட்டியலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:- பாலமுருகேசன்-மாவட்ட துணைத் தலைவர் ஆதிராஜ்- மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் (எ) பிரபு- துணைத் தலைவர் அமுதா கணேசன்- துணைத் தலைவர் லிங்கேஸ்வரி- துணைத் தலைவர் செளமியா தினேஷ்-துணைத் தலைவர் சித்ரா- துணைத் தலைவர் .சேதுராஜ் – […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
