• May 16, 2025

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் பட்டியலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன்  வெளியிட்டார்.

இதன் விவரம் வருமாறு:-

பாலமுருகேசன்-மாவட்ட துணைத் தலைவர்

ஆதிராஜ்- மாவட்ட துணைத் தலைவர்

செந்தில்குமார் (எ) பிரபு- துணைத் தலைவர்

அமுதா கணேசன்-  துணைத் தலைவர்

லிங்கேஸ்வரி- துணைத் தலைவர்

செளமியா தினேஷ்-துணைத் தலைவர்

சித்ரா- துணைத் தலைவர்

.சேதுராஜ் – பொதுச் செயலாளர்

வேல்ராஜ்- பொதுச் செயலாளர்

வீரமணி- பொதுச் செயலாளர்

இராஜேந்திரன்- செயலாளர்

முருகன்- செயலாளர்

செந்தில்குமார்- செயலாளர்

.ராஜ்குமார்- செயலாளர்

கண்ணன்.- செயலாளர்

லிங்கராஜ்- செயலாளர்

சீனிவாசன்- பொருளாளர்

புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் எதிர்புறம் உள்ள அங்கோ பிளாசா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன்  தலைமை தாங்கினார்.போத்தீஸ் ராமமூர்த்தி, வெங்கடேஷ் சென்னகேசவன், கிருஷ்ணன் ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணிகள் & பிரிவுகளின் நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *