• May 17, 2025

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு; 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி

 பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு; 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி


தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதிய இந்த தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பிளஸ்-1 தேர்ச்சி விவரங்கள்:-

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,43,232 (92.09 %).

மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,39,283 (88.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 11,025.


தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,07,098. மாணவியர்களின் எண்ணிக்கை : 4,24,610.
மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,488.
தேர்வெழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 9,205, தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8,460 (91.91%).
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 113(90.40%).
தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 4,326.

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 950 (21.96%).




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *