10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற கோவில்பட்டி இரட்டை சகோதரர்கள்

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் சங்கர் கணேஷ் மகன்கள் ஹரிகரன், செந்தில் நாதன். இரட்டை சகோதரர்களான இவர்கள் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நன்றாக படிப்பவர்கள்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இரட்டை சகோதரர்களான ஹரிகரன், செந்தில் நாதன் இருவரும் ஒரே மாதிரியாக 500க்கு 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் ஹரிகரன் தமிழில் 94, ஆங்கிலத்தில்91, கணிதத்தில் 83, அறிவியல் 94, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்,
இதே போன்று மாணவர் செந்தில் நாதன் தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 93, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 90 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஒரே மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ள இரட்டை சகோதரர்களை பள்ளி நிர்வாகத்தினர் , ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்;டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

