தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன்படி கோவை, நெல்லை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கோவில்பட்டியில் நேற்று காலை, மதியம் என கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.மழை நின்று சில நிமிடங்களில் தண்ணீர் வடிந்து விட்டது. இளையரசநேந்தல் சாலையில் சுரங்க பாலத்தில் மட்டும் சிறிதளவு தண்ணீர் […]
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, 2025, உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் ” பனிப்பாறை பாதுகாப்பு “. இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான உலகளாவிய ஆசை 55% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தினசரி […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராய் விஜயன், மாநிலச் செயலாளர் சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். மாநாட்டை விளக்கி பிரசார கூட்டம் கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் இனாம் மணியாச்சியில் நடைபெற்றது.. கிளை உறுப்பினர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார், மாவட்ட […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வானவியல் குறித்த செயல் விளக்க பயிற்சிக்கு தலைமை ஆசிரியை ராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு […]
கோவில்பட்டி திருமால் நகர் ஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருடாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி காலை 7 மணிக்கு திவ்ய ஆராதனம் கோஷ்டியுடன் தொடங்கியது. அன்று மாலை \81 கலச ஆராதனம், மூலவர் ஸ்ரீஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப் பெருமாளுக்கு 81 கலச திருமஞ்சனம், சிறப்பு திருவாராதனம், சாற்றுமறை கோஷ்டி ஆகியவை நடந்தது.. மறுநாள் காலை மற்றும் மாலையில் ஸ்ரீலட்சுமி = நரசிம்ம யாகம், வேத திவ்யப்ரபந்த பாராயணம், பூர்ணாகுதி சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. நேற்று […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 2,700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் இருந்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி […]
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கோவில்பட்டி ரெயில்நிலையம் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைசெயலாளர் சுபபிரியா தண்ணீர்ப்பந்தல் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள்,நீர் மோர் வழங்கினார். நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், மலைராஜ், ஒன்றிய செயலாளர் பெருமாள்சாமி, கயத்தார் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட […]
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம்-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். புதிய கட்டிடத்தையும்,புத்தக கண்காட்சியையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி மாரிக்காளை, முனிசீப் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் இளம் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் வக்கீல் செல்வம் முன்னிலை வகித்தார்., பொருளாளர் பாஸ்கரன் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பொன்ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பிரபு ஆண்டு அறிக்கை வாசித்தார் நாடார் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் வேல்முருகன் மற்றும் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக […]
தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி நாறும்பூநாதன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66. நேற்று காலை நடைபயிற்சி சென்ற போது மயக்கம் ஏற்பட்டு வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. தூத்துக்குடி மாவட்டம் கழுக மலையை சேர்ந்த நாறும்பு நாதன் தனது பள்ளி, கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் முடித்தார். திருமணத்திற்கு பின், குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார். .அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கல்லூரி […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
