கழுகுமலையை சேர்ந்த முன்னணி எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி நாறும்பூநாதன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.
நேற்று காலை நடைபயிற்சி சென்ற போது மயக்கம் ஏற்பட்டு வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கழுக மலையை சேர்ந்த நாறும்பு நாதன் தனது பள்ளி, கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் முடித்தார். திருமணத்திற்கு பின், குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார். .அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
கல்லூரி காலங்களில் சிறுகதை எழுத தொடங்கி, தொடர்ந்து நாவல், கட்டுரை என பல நூல்களை எழுதியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
தென் தமிழகத்தின் தமிழ் கலை இலக்கிய வரலாற்று எழுத்தாளர் ஆவார். பல்வேறு நூல்களை எழுதியுள்ள நாறும்பு நாதன் தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
2022 ஆம் ஆண்டு தமிழறிஞர் உ.வே.சா விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கி சிறப்பித்தது. இவரது சிறுகதை தொகுப்பான “கனவில் உதிர்ந்த பூ” பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் பாடநூலாக உள்ளது.
“யானை சொப்பனம்” நூலின் கட்டுரைகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களின் பாட நூலாக உள்ளது குறிப்பிட தக்கது.
நாறும்பூநாதன் மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
