மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு விளக்க பிரசார கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராய் விஜயன், மாநிலச் செயலாளர் சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டை விளக்கி பிரசார கூட்டம் கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் இனாம் மணியாச்சியில் நடைபெற்றது.. கிளை உறுப்பினர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி மணி ஆகியோர் உரையாற்றினர்
மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன் சிறப்புரையாற்றினார். இறுதியாக கிளை செயலாளர் அழகுசுப்பு நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன்,சின்னத்தம்பி,ராமசுப்பு, விஜயராஜ், முத்துசாமி, சித்ராதேவி, மூத்த தோழர் ஜவஹர், மாற்றுத்திறனாளிகள் சங்க முன்னாள் மாநில செயலாளர் முத்துக்காந்தாரி, தமுஎகச மாவட்ட தலைவர் ராமசுப்பு, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
