பள்ளியில் உலக தண்ணீர் தின விழா; போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு, 2025, உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் ” பனிப்பாறை பாதுகாப்பு “. இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறது.
2050 ஆம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான உலகளாவிய ஆசை 55% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தினசரி நீர் பயன்பாட்டு நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்வது எதிர்கால பயன்பாட்டிற்கு கணிசமான அளவு தண்ணீரைச் சேமிக்க வழிவகுக்கும்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தண்ணீரை சேமிக்கவும், தேவையான அளவு பயன்படுத்தவும் விழிப்புணர்வு மவுனமொழி நாடகம், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் பிரபு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். மாணவர்கள் தண்ணீர் சேமிப்பும் அதன் பயன்பாடும் பற்றிய பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
